அக்குறணையில் உள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ, வரிசையிலுள்ள பல கடைகளுக்கும் பரவியுள்ளது #LKA
AQL INTERNATIONAL SCHOOL
MILANO BAKER'S ஆகிய நிறுவகங்கள் தீ இற்கு இரையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி - மாத்தளை (A9 வீதி) அக்குறணை நகரில் உள்ள கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீயினால் அக்குறணையில் இருந்து மூடப்பட்டது.
வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர்
கண்டி நீதிமன்றத்தின் வழக்கு நடவடிக்கைகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்திற்கு வருகை தந்த மக்களை பாதுகாப்புக்காக வெளியேற்றியுள்ளனர்.
வெடிகுண்டு செயலிழக்க செய்யும் பிரிவு, இராணுவம் மற்றும் பொலிஸார் சோதனை கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். (
குறிப்பாக நகரில் போதிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாத நிலையில் குப்பைகளை கண்ட இடங்களில் வீசிச் செல்வதால் நகரம் அசுத்தப்பட்டு சுகாதார சீர்கேடான நிலையில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இவ்விடயத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் நுவரெலியா மாநகரசபை சற்று பின்தங்கியுள்ளது.
நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் சென்று உணவு சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். பெரும்பாலானவர்கள் வாகனங்களில் வரும் நிலையில் வரும் போதே உணவை சமைத்து எடுத்து வருகின்றனர் .
குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில் அந்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று (25) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த 15 பேர் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்விபத்தில் வெலிமடை - கொழும்பு பேருந்தில் பயணித்தவர்களே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கவரகல தோட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தால் சேதமடைந்த வீடுகளை இ.தொ.கா.வின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அவசர தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு முன்னர் வழங்கிய கூரைத்தகடுகளை அம்மக்களுக்கு உடனடியாக வழங்குமாறும், தீயினால் சேதமடைந்த வீடுகளின் பழுதுபார்க்கும் பணிகளை ஒரு வாரத்திற்குள் முடிவுக்கு கொண்டு வருமாறும் தோட்ட நிர்வாகத்திற்கு அவர் பணிப்புரையும் விடுத்தார்.
இந்த சம்பவம் நேற்று (01) பிற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குளவி தாக்கியதில் 15 மாணவிகளும் 27 மாணவர்களும் காயமடைந்ததாகவும், அவர்களை பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து 1990 அம்புலன்ஸ் மூலம் கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீபே பல்கலைக்கழக மாணவர்கள் 276 பேரும் ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 64 பேரும் ஹந்தானை மலையில் ஏற வந்துள்ளதாகவும் ஏனைய மாணவர்கள் பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.