வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிகிராமம் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் காரியாலயம் நேற்று(15) மாலை திறந்து வைக்கப்பட்டது.
ஆலைடியவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட 10ஆம் வட்டார வேட்பாளர் கே.இராஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற காரியாலய திறப்பு விழாவில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் வேட்பாளருமான ஆர்.ரதீசன் ஆலய முன்னாள் தலைவர் ம.கந்தசாமி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் இணைந்து கட்சி காரியாலயத்தை திறந்து வைத்தனர்.
இதன்போது கட்சியின் இணைப்பாளர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பிரதேச பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாட்டை நேசிக்கும் நாம் நாட்டினை சிறப்பாக வழிநடத்திவரும் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதுடன் ஆளுமைமிக்க நேர்மையானவர்களை கொண்ட பிரதேச சபையினை உருவாக்கி அதனூடாக உண்மையான அபிவிருத்தியை அடைய அனைவரும் முன்னின்று உழைக்கவேண்டும் என கட்சியின் இணைப்பாளர் இங்கு கோரிக்கை விடுத்தார்.
ஆலையடிவேம்பு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மூன்று கட்சிகள் மற்றும் சுயேட்சை குழு ஒன்று அடங்கலாக நான்கு தரப்பினர் போட்டியிடுகின்றனர்.
10 வட்டாரங்களில் இருந்து வட்டார ரீதியாக 10 உறுப்பினர்களும் மேலதிக ஆசனங்கள் 06 அடங்கலாக 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக மொத்தமாக 76 பேர் களத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
ஆலைடியவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட 10ஆம் வட்டார வேட்பாளர் கே.இராஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற காரியாலய திறப்பு விழாவில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் வேட்பாளருமான ஆர்.ரதீசன் ஆலய முன்னாள் தலைவர் ம.கந்தசாமி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் இணைந்து கட்சி காரியாலயத்தை திறந்து வைத்தனர்.
இதன்போது கட்சியின் இணைப்பாளர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பிரதேச பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாட்டை நேசிக்கும் நாம் நாட்டினை சிறப்பாக வழிநடத்திவரும் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதுடன் ஆளுமைமிக்க நேர்மையானவர்களை கொண்ட பிரதேச சபையினை உருவாக்கி அதனூடாக உண்மையான அபிவிருத்தியை அடைய அனைவரும் முன்னின்று உழைக்கவேண்டும் என கட்சியின் இணைப்பாளர் இங்கு கோரிக்கை விடுத்தார்.
ஆலையடிவேம்பு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மூன்று கட்சிகள் மற்றும் சுயேட்சை குழு ஒன்று அடங்கலாக நான்கு தரப்பினர் போட்டியிடுகின்றனர்.
10 வட்டாரங்களில் இருந்து வட்டார ரீதியாக 10 உறுப்பினர்களும் மேலதிக ஆசனங்கள் 06 அடங்கலாக 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக மொத்தமாக 76 பேர் களத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment