படகில் இருந்து தவறி விழுந்தவர் மரணம்





காத்தான்குடி கடற்கரையில் தவறி விழுந்து ஒருவர் மரணம்..!


`இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்`


நேற்று இரவு பாலமுனை கடற்கரையில் இருந்து படகு மூலம் மீன்பிடிக்க சென்ற காத்தான்குடி நூறானியா வீதியை சேர்ந்த பஷீர் நானா என்பவரே படஹிலிருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ளார்.


இரவு மீன்பிடித்துக் கொண்டு வரும்போது பூனொட்சிமுனை பகுதியில் தூக்கம் வந்ததால் படகின் விளிம்பில் தூங்கிக் கொண்டிருந்தவர் அதிகாலை 3.30 மணியளவில் அலை வந்து அடித்ததால் படகில் இருந்து தூக்க கலக்கத்தில் தவறி விழுந்து இவ்வாறு மரணம் அடைந்துள்ளார்..


ஜனாஸா தற்போது நதியா பீச் அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


காத்தான்குடி போலீசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது...