ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்




 


அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.


ஒலுவில் துறைமுகத்துக்கு நேற்றைய தினம் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டிருந்தேன்.


துறைமுகத்தை  பார்வையிட்டதுடன், பல தரப்பினருடனும் சந்திப்புகளில் ஈடுபட்டு கருத்தகளை கேட்டறிந்துகொண்டேன்.


இந்நிலையிலேயே கைவிடப்பட்டுள்ள நிலையில் இருக்கும் ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான சாத்தியப்படுகள் தொடர்பில்  அவதானம் செலுத்தியுள்ளதோடு, இதற்குரிய நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும்.


இந்த விஜயத்தில் அமைச்சின் செயலாளரும், கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளும் உடனிருந்தனர்.