எவரை எவர் வெல்லுவாரோ?




 


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு என்பதை முடிவு செய்ய நாளை துபையில் நடக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.


இரு அணிகளுமே ஒருவொருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில்தான் கடந்த காலங்களில் ஐசிசி கிரிக்கெட் பயணத்தைக் கடந்துள்ளனர். இந்த சாம்பியன்ஸ் தொடருக்கு முன்பாக இந்திய அணி மீதும், ரோஹித் சர்மா மற்றும் கோலி மீதும் ஏராளமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.


ஆனால், அவை அனைத்தும் போட்டித் தொடர் முடியும் தருவாயில் கரைந்துவிட்டன. இதுவரை 3 லீக், அரையிறுதி என 4 போட்டிகளிலும் வென்று இந்திய அணி வீறுநடை போடுகிறது. லீக் சுற்றில் இந்திய அணியிடம் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தாலும் மற்ற போட்டிகளில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.



மறக்க முடியாத 2000

நியூசிலாந்தும், இந்தியாவும், 25 ஆண்டுகளுக்கு முன்பு 2000ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மோதின. மிக விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், 265 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி, இரண்டு பந்துகள் மிச்சமிருந்தபோது இலக்கை எட்டி, இந்தியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


இப்போது மீண்டும் அதே நியூசிலாந்து அணியுடன் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி 25 ஆண்டுகளுக்குப் பின் மோதுகிறது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்த போட்டியை இந்திய அணி பயன்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.


40 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியைக் காண ரசிகர்கள் மத்தியில் அதீத ஆர்வம் காணப்படுகிறது. துபை கிரிக்கெட் நிர்வாகம் டிக்கெட் விற்பனையைத் தொடங்கிய 40 நிமிடங்களில் மொத்த டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.


ரூ. 6 ஆயிரம் முதல் ரூ.2.50 லட்சம் வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 25 ஆயிரம் பேர் வரை அமரக்கூடிய அரங்கில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகிவிட்டதால், அரங்கு நிறைந்து ரசிகர்கள் ஆட்டத்தை ரசிப்பார்கள்



ஐசிசி தொடரில் யார் ஆதிக்கம்?

கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி 86 ஐசிசி போட்டிகளில் பங்கேற்று அதில் 70 போட்டிகளில் வென்றுள்ளது. அடுத்த இடத்தில் தலா 49 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. 3 அணிகளுமே தலா 77 போட்டிகளில் விளையாடியுள்ளன.


2011-ம் ஆண்டுக்குப் பிறகு நடந்துள்ள 14 ஐசிசி போட்டித்தொடர்களில் 12 முறை இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 4 முறை அரையிறுதியிலும், 5 முறை இறுதிப்போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. 3 முறை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.


நியூசிலாந்து அணியும் ஐசிசி தொடர்களில் நிலையாக, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதை புள்ளிவிவரம் உறுதிப்படுத்துகிறது. 8 முறை நாக்அவுட் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ள நியூசிலாந்து அணி, 4 முறை அரையிறுதியிலும் 3 முறை இறுதிப்போட்டியிலும் தோற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியனானது.



சுழற்பந்துவீச்சு பலம்

இரு அணிகளிலும் சுழற்பந்துவீச்சு பலமாக இருக்கிறது. இந்திய அணியில் மாயாஜால சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, ஜடேஜா, அக்ஸர் படேல், ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் என வெவ்வேறு கோணங்களில் பந்துவீசக் கூடியவீரர்கள் உள்ளனர். நியூசிலாந்து அணியில் சான்ட்னர், பிரேஸ்வெல், ரச்சின் ரவீந்திரா, பிலிப்ஸ் என 4 சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.


இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடங்கியதிலிருந்து துபையை விட்டு வேறு எங்கும் விளையாடவில்லை. ஆனால் நியூசிலாந்து அணியோ பாகிஸ்தான், துபை என இரு இடங்களிலும் மாறி, மாறி விளையாடிவிட்டது.


துபை மைதானத்தை நன்கு அறிந்திருப்பது இந்திய அணிக்கு பலம் சேர்க்கிறது. இதுவரை 4 போட்டிகளில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டும் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.


இந்திய அணிக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதைப் போல் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.


நியூசிலாந்து அணியில் கான்வே, வில் யங், சான்ட்னர், ஹென்றி ஆகிய 4 முக்கிய வீரர்களும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்,


இந்தியா - நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிபட மூலாதாரம்,Getty Images

ரோஹித், கோலி இருவரும் மீண்டும் சாதிப்பார்களா?

இந்திய அணியில் உள்ள வீரர்கள் வெற்றிக்கு பலமுறை பங்களிப்பு செய்துள்ளார்கள் என்றாலும், விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் மற்றவர்களை விஞ்சி நிற்கிறார்கள்.


2023 உலகக் கோப்பைத் தொடரில் 765 ரன்கள் குவித்து கோலி சாதனை படைத்தார். சாம்பியன்ஸ் டிராபியில் கெயில் சாதனையான 791 ரன்களை முறியடிக்க கோலிக்கு இன்னும் 46 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.


ரோஹித் சர்மா ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் 7 சதங்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு பலமுறை உதவியுள்ளார். இதில் 5 சதங்கள் 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா அடித்தவை.


டி20 உலகக் கோப்பைத்தொடரில் 50 சிக்ஸர்களை ரோஹித் விளாசியுள்ளார். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை ரோஹித் பெரிதாக ரன்களைக் குவிக்கவில்லை. ஒருவேளை இன்று நடைபெறும் ஆட்டத்தில் ரோஹித் விஸ்வரூமெடுத்தால் இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டும்.



சாம்பியன்ஸ் டிராபியில் ஜடேஜா அதிகபட்சமாக 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும், தங்கப்பந்தையும் ஜடேஜா வென்றார் என்பதால் இந்த முறையும் இவரின் ஆட்டம் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது.


கடந்த 2023 உலகக் கோப்பைத் தொடரில் பாதியில் இருந்து ஆட்டங்களில் பங்கேற்ற ஷமி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரே தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இந்த 4 பேரும் இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கக் கூடியவர்கள்.


'சேஸிங்' ரகசியம் இதுதான்! விராட் கோலி என்ன சொன்னார்?

5 மார்ச் 2025

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த இந்தியா - 14 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறிய கனவு

4 மார்ச் 2025

இந்தியா - நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிபட மூலாதாரம்,Getty Images

கோலியும் லெக் ஸ்பின்னும்

விராட் கோலி சமீபகாலமாக லெக் ஸ்பின், ரிஸ்ட் ஸ்பின்னுக்கு தடுமாறுகிறார், திணறுகிறார் என்றால் கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் மறுப்பதற்கில்லை. 2024 தொடக்கத்தில் இருந்து ஒருநாள் போட்டிகளி்ல் கோலி 5 முறை லெக் ஸ்பின்னர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்துள்ளார். லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக கோலி 48 ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே வைத்துள்ளார்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் கூட கோலி சுழற்பந்துவீச்சை பெரிதாக அடித்தாடவில்லை. அவர் ஆடம் ஸம்பாவுக்கு எதிராக 24 பந்துகளில் 23 ரன்களும், தன்வீர் சங்கா பந்துவீச்சில் 12 பந்துகளில் 9 ரன்களும் சேர்த்தார்.


தன் மீதான விமர்சனங்களுக்கு கோலி, இந்தத் தொடரில் ஒரு சதம், 84 ரன்கள் சேர்த்து பதில் அளித்துள்ளார். இருப்பினும் கோலி சுழற்பந்துவீச்சுக்கு திணறுவார் என்ற சந்தேக ஆயுதத்தை நியூசிலாந்து சாதகமாகப் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.


ஆபத்தான நியூஸி. வீரர்கள்

நியூசிலாந்து அணி தனது சமீப வெற்றிகளில் வில்லியம்ஸன் இல்லாமல் கடந்து வந்திருக்க முடியாது. அந்த அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னராக அவர் கருதப்படுகிறார். ஐசிசி தொடர்களில் நியூசிலாந்தின் 6-வது பைனலில் வில்லியம்ஸன் விளையாடி வருகிறார்.


ஐசிசி வெள்ளைப் பந்துப் போட்டிகளில் வில்லியம்ஸன் போல் எந்த நியூசிலாந்து வீரரும் அதிக ரன்களைச் சேர்த்தது இல்லை. 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் பைனல் வரை செல்லும்போது அதிக ரன்களை சேர்த்த வீரராக வில்லியம்ஸன் இருந்தார்.


அதேபோல மிட்ஷெல் சான்ட்னர் முதல்முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு தலைமை ஏற்று அணியை வழிநடத்துகிறார். கடந்த 10 ஆண்டுகளில் டேனியல் வெட்டோரிக்குப் பின், நியூசிலாந்துக்கு கிடைத்த சிறந்த சுழற்பந்துவீச்சாளராக சான்ட்னர் கருதப்படுகிறார்.


2016-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் 16 விக்கெட்டுகளை வீழ்த்திய சான்ட்னர், அரையிறுதிவரை செல்ல உதவினார். இந்த சாம்பியன்ஸ் டிராபியிலும் இதுவரை 7 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.


ஹென்றியும் கடந்த 2019 உலக்கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் நியூசிலாந்து அணிக்கு முக்கியப் பங்களிப்பு செய்துள்ளார். 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு ஹென்றி தொடக்கத்தில் வீழ்த்திய 2 விக்கெட்டுகளே முக்கிய காரணம். நடப்பு சாம்பியன்ஸ் டிராபியிலும் 10 விக்கெட்டுகளுடன் ஹென்றி முன்னணியில் இருக்கிறார்.


இந்தியா - நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிபட மூலாதாரம்,Getty Images

இந்தியா - பாகிஸ்தான் 'ஆயுதமில்லா போரை' இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பது எது? ஒரு பகுப்பாய்வு

26 பிப்ரவரி 2025

பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற மிதாலி ராஜ் - இவர் யார்?

20 பிப்ரவரி 2025

ஹென்றி விளையாடுவாரா?

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் மாட் ஹென்றி தோள்பட்டை வலி காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.


தோள்பட்டை காயத்திலிருந்து ஹென்றி முழுமையாக குணமாகவில்லை எனத் தெரிகிறது. நியூசிலாந்து அணி நிர்வாகமும் ஹென்றி உடல்நிலை குறித்து எதுவும் பேசாமல் கடைசி நேரத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.


நடப்புத் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் ஹென்றி ஒருவேளை பந்துவீச முடியாமல், விளையாடாவிட்டால் இந்திய அணிக்கு சாதகமாக அமையும்.


இந்தியா - நியூசிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிபட மூலாதாரம்,Getty Images

ஆடுகளம் எப்படி?

அரையிறுதி ஆட்டத்தில் இரு அணிகளுக்குமே புதிய ஆடுகளங்கள் பயன்படுத்தப்பட்டன. துபை ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு ஓரளவு ஒத்துழைக்கும் ஆனால், சிறப்பாக இருக்கும என்று கூற இயலாது.


துபாய் ஆடுகளங்கள் பெரும்பாலும் முதல் 10 ஓவர்கள் வேகப்பந்துவீச்சுக்கும், அதன்பின் சுழற்பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும், நடுவரிசை ஓவர்களில் ஆடுகளம் மெதுவாகிவிடுவதால் ஸ்கோர் செய்ய பேட்டர்களுக்கு கடினமாக இருக்கும்.


இரவில் பனியின் தாக்கம் இருக்காது என்பதால், பந்துவீசுவதில் சிரமம் இருக்காது. இதனால், சேஸிங் செய்யும் அணி ரன் சேர்க்க போராட வேண்டியதிருக்கும். டாஸ் வெல்லும் அணி குறைந்தபட்சம் 270 ரன்களுக்கு மேல் சேர்த்துவிட்டால் வெற்றி எளிதாகும்.