தொழில் ஆணையாளர் நாயகமாக பதவியேற்ற மூன்றாவது பெண்




 


புதிய தொழில் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட நதீகா வட்டலியத்த இன்று (24) காலை நாராஹேன்பிட்ட - மெஹேவர பியெஸ கட்டிடத்தில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தில் பதவியேற்றார்.


2001 ஆம் ஆண்டு தொழில் அதிகாரியாக அரச சேவையில் இணைந்த நதீகா வட்டலியத்த, 2003 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்தார். அவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளராகவும், தேசிய தொழில் ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாகவும், இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாகவும், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகவும், பல அரச நிறுவனங்களில் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.


நதீகா வட்டலியத்த தொழில் திணைக்கள வரலாற்றில் தொழில் ஆணையாளர் நாயகப் பதவிக்கு நியமிக்கப்பட்ட மூன்றாவது பெண்மணி ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.