- மன்னார் நிருபர் லெம்பட்-
வீதியில் நேற்று (22) அதிகாலை இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (22) அதிகாலை பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகிய நிலையில், குறித்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்தனர்.
இதன்போது, குறித்த டிப்பர் வாகனத்தில் 4 பேர் பயணித்திருந்தனர்.
சம்பவத்தில் பெரியமடு பகுதியைச் சேர்ந்த கே.சத்திய பிரபாகரன் (வயது-31) சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, சாரதி உள்ளடங்களாக மூவர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சாரதி மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தெரியவந்துள்ளது.
அதன்படி, வாகன சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் காயமடைந்த மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு சகோதரர்களில் ஒருவர் வீடு திரும்பியுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
-மன்னார் நிருபர் லெம்பட்-
Post a Comment