வானில் அதிசய இரத்த நிலவு தோன்றுமா?





பாறுக் ஷிஹான்

இரத்த நிலவு எனப்படும் blood moonஐ  இன்று 13 மாலை முதல் மறுநாள்  14 அதிகாலை வரை பார்க்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.பூமியின் நிழலின் இருண்ட பகுதிக்குள் சந்திரன் முழுமையாகச் செல்லும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதன் காரணமாக சிறிது நேரம் வானம் முற்றிலும் இருட்டாகத் தோன்றும். ஆனால் அது முற்றிலும் கருப்பாக இருப்பதில்லை. மாறாக சந்திரன் சிவப்பு நிறத்தில் வானத்தில் தோன்றுகிறது. இந்த கிரகணத்தின் போது  சந்திரன் மெதுவாக படிப்படியாக அடர் சிவப்பு நிறமாக மாறும், இது முழு சந்திர கிரகணத்தின் காரணமாக நிகழும். அப்போது வானத்தில் இரத்தம் தோய்ந்த நிறத்தில் நிலவு காணப்படுவதால் இதை இரத்த நிலவு அல்லது பிளட் மூன் என்று அழைக்கின்றனர்.


 கண்டுகளிக்க முடியும். அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, ரஷ்யா, ஜப்பான் மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் தெளிவாகத் தெரியும். இது இந்தியாவில் முழுமையாகத் தெரியாது. இந்தியாவில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அதிகாலையில் தோன்றும் சந்திர கிரகணத்தை கண்டுகளிக்கலாம்.