வி.சுகிர்தகுமார்
கிழக்கு மாகாண பொங்கல் விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் பங்கேற்கவுள்ளனர்.
பொங்கல் விழா இம்மாதம் 08 ஆம் திகதி சனிக்கிழமை காலை முதல் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறவுள்ளதுடன் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் மாவட்ட செயலாளர் என பல்வேறு அதிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கிழக்கு மாகாண கலாசார பண்பட்டாலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து இவ்வருடம் மாகாண பொங்கல் விழாவை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக பொங்கல் விழா தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் கூட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று (05) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண கலாசார பண்பட்டாலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.நவனீதன் கலந்து கொண்டதுடன் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் கலாசார உத்தியோகத்தர்கள் ஆலயங்கள் பொது அமைப்புக்கள் விளையாட்டு கழகங்கள் என பல்வேறு அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது பாரம்பரிய முறையிலான பொங்கல் மற்றும் பல்லேறு கலை கலாசார நிகழ்வுகளுடன் பொங்கல் விழா இடம்பெறும் எனவும் சிறந்த பொங்கலுக்கான பரிசு சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு பாரம்பரிய விவசாய உபகரணங்களின் கண்காட்சி பட்டம் விடுதல் சிறந்த மாட்டு வண்டிக்கான பரிசு என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் பொறுப்புக்கள் யாவும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
மாகாண பொங்கல் விழா பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தை மையமாக கொண்டு கடந்த மாதம் 23ஆம் திகதி நடாத்துவது என தீர்மானிக்கப்பட்டபோதும் சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
பொங்கல் விழா இம்மாதம் 08 ஆம் திகதி சனிக்கிழமை காலை முதல் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறவுள்ளதுடன் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் மாவட்ட செயலாளர் என பல்வேறு அதிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கிழக்கு மாகாண கலாசார பண்பட்டாலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து இவ்வருடம் மாகாண பொங்கல் விழாவை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக பொங்கல் விழா தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் கூட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று (05) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண கலாசார பண்பட்டாலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.நவனீதன் கலந்து கொண்டதுடன் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் கலாசார உத்தியோகத்தர்கள் ஆலயங்கள் பொது அமைப்புக்கள் விளையாட்டு கழகங்கள் என பல்வேறு அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது பாரம்பரிய முறையிலான பொங்கல் மற்றும் பல்லேறு கலை கலாசார நிகழ்வுகளுடன் பொங்கல் விழா இடம்பெறும் எனவும் சிறந்த பொங்கலுக்கான பரிசு சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு பாரம்பரிய விவசாய உபகரணங்களின் கண்காட்சி பட்டம் விடுதல் சிறந்த மாட்டு வண்டிக்கான பரிசு என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் பொறுப்புக்கள் யாவும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
மாகாண பொங்கல் விழா பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தை மையமாக கொண்டு கடந்த மாதம் 23ஆம் திகதி நடாத்துவது என தீர்மானிக்கப்பட்டபோதும் சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Post a Comment
Post a Comment