கிழக்கு மாகாண பதில் பிரதிப் பிரதம செயலாளராக கலாநிதி கோபாலரத்தினம்





 ( வி.ரி.சகாதேவராஜா)


கிழக்கு மாகாண பதில் பிரதிப் பிரதம செயலாளராக( personal and training)
 கலாநிதி மூ.கோபாலரத்தினம்(மூகோ) நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர இந்த நியமனத்தை நேற்று வழங்கியுள்ளார்.

 கிழக்குமாகாணத்தில் ஆளுநர் மேற்கொண்ட அதிரடி  உயர்நிருவாக மாற்றத்தில் ஓரங்கமாக இவரது நியமனம் இடம்பெற்றுள்ளது.

இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரியான இவர், தற்போது  கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளராக கடமை புரிந்துவருகின்றார்.
அதற்கு மேலதிகமாக இப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதற்குமுன்னர் திறைசேரி முகாமைத்துவ திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக. சேவையாற்றியிருந்தார்.

மட்டக்களப்பு செட்டிபாளையத்தினை பிறப்பிடமாக கொண்ட இவர், மூத்ததம்பி செல்லம்மா தம்பதியினரின் புதல்வராவார். தற்போது கல்முனையில் வாழ்ந்துவருகிறார்.

1995 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவை அதிகாரியாக  தெரிவுசெய்யப்பட்ட இவர், தனது  ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்தரம் வரை செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். கலைமாணி பட்டத்தினை பேராதனை பல்கலைக் கழகத்திலும், பொதுநிருவாக துறையில் முதுமானிப் பட்டத்தினை இந்தியா பல்கலைக் கழகத்திலும் பெற்றார்.

இவர், தம்பலகாமம், ஏறாவூர் நகர் ,பட்டிப்பளை, கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும், குச்சவெளி, நாவிதன்வெளி,திருக்கோயில் மற்றும் களுவாஞ்சிகுடி  பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும் பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப்பெற்றிருந்தார்.

கல்முனை லயன்ஸ்கழக தலைவராகவிருந்த லயன் கோபாலரெத்தினம், பல சமுகசேவைகளில் முன்னின்று சேiவாயற்றிவருபவராவார். சிறந்த ஒருகலைஞரான இவர் பிரபல மேடைகளில் பழையபாடல்களைப்பாடி அசத்தியிருக்கிறார்.