ஜெர்மன் பெண்ணும் உயிரிழப்பு,நச்சு வாயு காரணமாக இருந்திருக்கக்கூடும்?






கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெர்மன் பெண்ணும் இன்று (03) உயிரிழந்துள்ளார்.

 

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பிரிட்டிஷ் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

 

நச்சு வாயுவை சுவாசித்ததன் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்க கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.