பாறுக் ஷிஹான்
77 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வு செவ்வாய்க்கிழமை(4) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை குவாஷி நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது 77 ஆவது சுதந்திர தின தேசிய கொடியை சம்மாந்துறை குவாஷி நீதிமன்றத்தின் பதில் குவாஷி நீதிபதி அஹமட் லெவ்வை ஆதம்பாவா ஏற்றி வைத்தார். இந்நாட்டின் சுபீட்சத்திற்காகவும் சமாதானத்திற்காகவும் இந்நாட்டு மக்கள் ஐக்கியப்பட்டு வாழவேண்டும் என்பதற்காகவும் தேசிய கீதம் இசைக்கப்பட்டடன.
மேலும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மெளன பிரார்த்தனையும் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து துஆ பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டதுடன் இந்நிகழ்வில் சம்மாந்துறை குவாசி நீதிமன்ற நிர்வாக உத்தியோகத்தரும் மேல் நீதிமன்ற உத்தியோகத்தருமான எம்.எப்.எம்.சமீன், குவாசி நீதிமன்ற உத்தியோகத்தர்கள், உளவளத் துணை உத்தியோகத்தர் எம்.சி. பௌமிலா மற்றும் உதவியாளர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment