( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை ராமகிருஷ்ண மிஷன் மலையகத்துக்கான முதலாவது கிளையை நுவரெலியா கொட்டகலையில் இன்று (10) திங்கட்கிழமை காலை கோலாகலமாக திறந்து வைத்தது.
வரலாற்றில் முதல் தடவையாக மலையகத்தில் பகவான் ராமகிருஷ்ண ஆலயமும், சிவானந்த நலன்புரி நிலையமும் இன்று 10 ஆம் தேதி திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
இலங்கை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன .
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் சகல ஏற்பாடுகளையும் கவனித்து வரவேற்புரை நிகழ்த்தினார்.
பிரதம அதிதியாக உலகளாவிய ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடங்களின் துணைத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்த ஜி மகராஜ் கலந்து சிறப்பித்தார்.
இந்தியா காசி ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி சர்வரூபானந்த ஜி மகாராஜ் அவர்களும் மதுரை ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி நித்யதீபானந்த ஜீ மகராஜ் அவர்களும் வருகை தந்து சிறப்பித்தனர்.
கும்பாபிஷேக கிரியைகளை சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கு. வை.க .வைத்தீஸ்வர குருக்கள் நடத்தி வைத்தார்.
இந்நிலையத்தை அமைப்பதற்கு காட்சியையும் ஏனைய உதவிகளையும் விஜயபாலன் ரெட்டியார் லலிதா விஜயபாலன் தம்பதியர் வழங்கி வைத்தனர்.
நினைவு மலரும் வெளியிடப்பட்டது.
நாடெங்கிலும் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று 9 ஆம் தேதி இன்று ஞாயிற்றுக்கிழமை கொட்டகலை பிரதேசத்தில் மாபெரும்
ஊர்வலம் கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் சுவாமி இராஜேஸ்வரானந்தா ஜீ மகராஜ் முன்னிலையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment