சர்வதேச சிறுவர்கள் மற்றும் முதியோர் தின கலை கலாசார, விளையாட்டு நிகழ்வுகள்




 


நூருல் ஹுதா உமர்


சர்வதேச சிறுவர்கள் மற்றும் முதியோர் தினத்தை  முன்னிட்டு சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கான கலை கலாசார, விளையாட்டு நிகழ்வுகள் சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.ஜஃபரின் ஏற்பாட்டிலும், சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீமின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃப்பிகா, நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்சான், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ மஜீத் , சமுர்த்தி வங்கி  முகாமையாளர்  ஐ.எல்.ஹிதாயா , கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா, திட்டமிடல் பிரிவு சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜெமீல், அல் - ஜலால் வித்தியாலய அதிபர் யு.கே. சிராஜ், சமுர்த்தி பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.எஸ்.சாஹிரா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட சமுர்த்தி அமைப்புகளின் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.