தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்படுமாயின்,தடையாக இருக்கும் கட்சிகளே பொறுப்பேற்க வேண்டும்




 


வி.சுகிர்தகுமார்/யதுர்சன்







அம்பாரையில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்படுமாயின் ஒருங்கிணைப்பிற்கு முட்டுக்கடடையாக இருக்கும் கட்சிகளே பொறுப்பேற்க வேண்டும் என அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழவினர் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்றில் இன்று(06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைப்பின் செயலாளர் ஆர்.யுவேந்திரா மற்றும் தலைவர் கே.வரதராஜன் ஆகியோர் குறிப்பிட்டனர்.
அம்பாரை மாவட்டத்தில் தமிழ் கட்சிகள்; அனைத்தும் ஒரு பொதுச்சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் எனும்; அடிப்படையில் தமிழ்த்தேசியம் சார்ந்த கட்சிகளை நாம் முதலில் அனுகியபோது தமிழ்த்தேசியத்திற்கு அப்பாற்பட்ட கட்சிகளுடன் ஒன்றுபட தயாரில்லை என தமிழ்த்தேசியம் சார்ந்த கட்சிகள்; திட்டவட்டமாக மறுத்தனர்.
ஆயினும் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றும் முயற்சியில் குறைந்தபட்;சம் தமிழ்த்தேசியம் சார்ந்த இரு பெரும் கட்சிகளான ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக்கட்சியினை ஓங்கிணையுமாறு வலியுறுத்தினோம். இதன் மூலம் தமிழ் பிரதிநிதித்துவம் காப்பாற்றும் முயற்சியை ஆரம்பித்தோம். இச்சந்தர்ப்பத்தில் ஒன்றுபட விருப்புடையவர்களாக தாம் உள்ளதாகவும் கட்சி உயர்பீடங்களே முடிவு எடுக்கவேண்டும் எனவும் கட்சிகளின் அம்பாரை மாவட்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழரசுக்கட்சியின் மூத்ததலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் திருகோணமலையில் தமிழரசுக்கட்சி சின்னத்திலும் அம்பாரையில் மாற்றுக்கட்சிகளின் சின்னத்திலும்; போட்டியிட சம்மதித்தபோதிலும் அம்பாரை மாவட்ட தமிழரசுக்கட்சியின்  பிரதிநிதிகள் தமிழரசுக்கட்சியின் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என விவாதித்ததாகவும் எனினும் ஒன்றுபடும் இலக்கை அடைய இன்னும் பேச விரும்புகின்றோம் என கூறியிருந்தார்.
ஆயினும் இதுவரை ஒருங்கிணைப்பு தொடர்பான உடன்படிக்கை எட்டப்படவி;ல்லை. சிலவேளைகளில் இவ்வாறான உடன்படிக்கை எட்டப்படாமல் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டு மீண்டுமொரு தரம் பிரதிநிதித்துவம் அம்பாரையில் இல்லாமல் போனால் ஒருங்கிணைப்பிற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் கட்சிகளே பொறுப்பேற்க வேண்டும் என நாம் கூறி வைக்க விரும்புகின்றோம்.
மேலும் இடம்பெறவுள்ள கூட்டத்தில் சாதகமான முடிவு எட்டப்பட்டு கட்சிகள் ஒன்றாக மாவட்டத்தில் போட்டியிட்டு பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படவேண்டும் என்பதே அம்பாரை பெரும்பான்மை தமிழ் மக்களின் அவாவாக இருக்கின்றது என்பதையும் அழுத்தமாக பதிவு செய்கின்றோம்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரிந்து நின்று பிரதிநிதித்துவத்தை இழந்தபின்னர் உடனடியாக களம் இறங்கிய அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் எதிர்காலத்தில் ஒரே சின்னத்தில் அனைவரும் போட்டியிடவேண்டும் எனும் ஒரே நோக்கோடு மாத்திரம் உருவாக்கப்பட்டது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.