சங்கு சின்னத்தில்-






( வி.ரி. சகாதேவராஜா)
 எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு  அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று (11) வெள்ளிக்கிழமை  அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர் .

கிழக்கு மாகாண சபையின் முன்னாள்  உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் தவிசாளருமான சோமசுந்தரம் புஸ்பராஜா உள்ளிட்ட பத்து பேர் வேட்புமனுவில் ஒப்பமிட்டிருந்தனர்.

சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்புமனுவில் சோமசுந்தரம் புஷ்ப ராஜா, சபாபதி  நேசராசா,  கதிர்காமத்தம்பி வேலுப்பிள்ளை , கிருஷ்ணபிள்ளை லிங்கேஸ்வரன்,  சிந்தாத்துரை துரை சிங்கம், சுப்பிரமணியம் தவமணி, தியாகராஜா கார்த்திக் ,ராஜகுமார் பிரகாஷ் ,செல்லத்தம்பி புகனேஸ்வரி, பாலசுந்தரம் பரமேஸ்வரன் ஆகியோர் ஒப்பிட்டுள்ளனர்.

இன்று பகல் 11.30 மணியளவில்  வேட்பாளர் பட்டியல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டது.