காரைதீவின் புதிய பிரதேச செயலாளருக்கு மகத்தான வரவேற்பு




 



( வி.ரி.சகாதேவராஜா)

 காரைதீவு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கின்ற இலங்கை நிருவாக சேவை அதிகாரி கணேசமூர்த்தி அருணன் அவர்களுக்கு இன்று (4)  வெள்ளிக்கிழமை சிவில் அமைப்புகளால் பாரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

 முன்னதாக காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில்  விசேட பூஜை வழிபாடு இடம் பெற்றது.
பின்னர் அங்கிருந்து 
மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அவர் அழைத்து வரப்பட்டார்.

 பின்பு பிரதேச செயலாளர் பணிமனையில் மக்களின் வரவேற்பு கூட்டமும் இடம்பெற்றது. 

அங்கு அறங்காவலர் சபை செயலாளர் சி. நந்தேஸ்வரன்  தலைவர் இ.குணசிங்கம் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்  ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 மாவடி கந்தசாமி ஆலய  செயலாளர் சிவகுமார் நன்றி உரையாற்றினார்.

கூட்டத்தில் மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி ஆலய தலைவர்கள் பரிபாலன சபையினர் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.