தொழில் முயற்சிகளுக்கு பெண்களை வலுவூட்டல்




 


நூருல் ஹுதா உமர்


தொழில் முயற்சிகளுக்கு பெண்களை வலுவூட்டல் எனும் தொனிப்பொருளின் கீழ், காரைதீவு பிரதேச செயலாளர் ஜீ. அருணன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பிரதம அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் சிவஞானம் ஜெகராஜன் ஐயா அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்று மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தினரால் அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை காட்சிப்படுத்தி, விற்பனையும்  செய்யப்பட்டது.

இதன் போது காரைதீவு பிரதேச மாதர் சங்கங்களினால் முன்னாள் பிரதேச செயலாளரும் தற்போதைய அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்களினால் சிறப்பாக பயிற்சிகளை முடித்த மாணவர்கள் அதன் ஆசிரியர் மற்றும் மாதர் அபிவிருத்தி சங்க தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர்கள் கௌரவப்படுத்தி பாராட்டப்பட்டனர்