நியமனம்







( வி.ரி. சகாதேவராஜா )
காரைதீவு பிரதேச செயலகத்தின் புதிய நிரந்தர பிரதேச செயலாளராக  இலங்கை நிருவாக சேவை அதிகாரி ஜி .அருணன் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னர் பிரதேச செயலாளராக இருந்த சிவ.ஜெகராஜன் பதவி உயர்வு பெற்று மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக அம்பாறை கச்சேரிக்கு சென்றதையடுத்து வெற்றிடம் ஏற்பட்டது.

அதன் பின்னர் இரு அதிகாரிகள் தற்காலிக பதில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தனர்.
தற்போது நிரந்தரமாக நியமிக்கப்பட்ட அருணன் 
வாகரை பிரதேச செயலாளராகவிருந்து இடமாற்றம் பெற்று வந்தவர் .

அவர் முன்னதாக காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசையில்‌ கலந்து கொண்டு ஆசி பெற்றார்.

பிரதேச செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்று கையொப்பமிட்டார்.

பின்னர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடனான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.