திகிலிவெட்டை மக்களுக்கு இணைந்த கரங்களால் உலருணவு




 


( வி.ரி. சகாதேவராஜா)

 மட்டக்களப்பு மாவட்டத்தில் 
அடிப்படை வசதிகள் இன்றி வாழும் திகிலிவெட்டை மக்களுக்கு இணைந்த கரங்கள் உறவுகளால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கிரான் பிரதேச செயலக பிரிவில் திகிலிவெட்டை கிராமத்தில் வசிக்கும் அதி கஸ்ர குடுப்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் இணைந்த கரங்கள் அமைப்பின் சிரேஸ்ர உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டது. 

குடி நீர், மின்சார வசதி மற்றும் தொழில் வாய்ப்பு அற்று யானைகளின் அச்சுறுத்தலினால் இந்த கிராமத்தில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்காக  நேற்றுமுன்தினம் (19) 
இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப் பங்களிப்பினால் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான 
பகீரதன் .காந்தன். கஜன் .சனா
.நேமிநாதன்,
.வசந், ஜெயக்காந்தன் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.