ஆசிரியர் தின விழாவும் சேவை நலன் பாராட்டு விழாவும்!







( காரைதீவு   சகா)

சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட அன்னமலை ஸ்ரீ சக்தி வித்யாலயத்தின் சர்வதேச ஆசிரியர் தினவிழாவும்  சேவை நலன் பாராட்டு விழாவும் பாடசாலை அதிபர் பொன். பாரதிதாசன் தலைமையில்  நேற்றுமுன்தினம் (7) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார். 

சர்வதேச ஆசிரியர் தின விழாவில் சம்மாந்துறை வலயத்தில் 26 ஆண்டுகள் உதவிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற வி.ரி.சகாதேவராஜாவிற்கான சேவை நலன் பாராட்டு விழாவும் இடம் பெற்றது.

முன்னதாக மாணவர்கள் பெற்றோர்கள் இணைந்து பிரதம அதிதி மற்றும் அதிபர் ஆசிரியர்களை மாலை சூட்டி வரவேற்றார்கள்.

 மாணவர்களின் கலை ஆற்றுகைகள் அங்கே பெற்றோர்களின் உதவியுடன் நிறைய வெளிப்பட்டது .

பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் திருமதி காஞ்சனா சிவகாந்தன் தலைமையிலான பெற்றோர்கள் குழு முன்னெடுத்த இவ் விழாவில் பிரதமஅதிதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டப்பட்டார்கள்.