ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் சிறுவர் தின நிகழ்வுகள்




 



வி.சுகிர்தகுமார்   

 சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்றுநிருபங்களுக்கமைய சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் பிரதேச செயலகங்களில் இன்று இடம்பெற்றன.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும்  (01)சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக வழிநடாத்துவோம் எனும் தொனிப்பொருளுக்கமைய சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ந.கிருபாகரன் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவபணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் கருத்திட்;ட முகாமையாளர் கமலப்பிரபா சமுர்த்தி முகாமையாளர்களான சுரேஸ்காந்த் மற்றும் கவிதா உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கை செயற்பாடுகள் தொடர்பிலும் அதிதிகளால் கருத்துக்கள் வழங்கப்பட்டன.