வாணி விழா ஊர்வலங்கள்






 வி.சுகிர்தகுமார்  


 வாணி விழா ஊர்வலங்கள் பாடாசாலைகளிலும் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக அக்கரைப்பற்று கோளாவில் 3 பெருநாவலர் வித்தியாலயத்திலும் வாணி விழாவை முன்னிட்டு இன்று (11) ஊர்வலம் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் ஸ்ரீ மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற வாணி விழா ஊர்வலத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டதுடன் பூஜைகளை சிவஸ்ரீ க.தவேந்திரக்குருக்கள் நடாத்தி வைத்தார்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் சரஸ்வதி தேவியின் பிரார்த்தனை பாடல்களை பாடி சென்றனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பொதுமக்களால் தாகசாந்தி ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.