குவாஷி நீதிமன்ற கட்டிடம் திறப்பு விழா




 


பாறுக் ஷிஹான்


 சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற கட்டிடம்  புனர்  நிர்மாணம் செய்யப்பட்டு இன்று  கல்முனை பிராந்திய மேல் நீதிமன்ற நீதிபதி  ஜெயராமன் றொக்சியினால்   நாடாவை வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற நீதிபதி  அஹமது லெவ்வை ஆதம்பாவா  , குவாஷி நீதிமன்ற நிர்வாகச் செயலாளர்  எஸ் ஜமால்தீன் , கல்முனை மேல் நீதிமன்ற பதிவாளர்   ஏ.எல் அதிமுள்ளா , கல்முனை நீதிமன்ற வலயக் கணக்காளர்  எம் .முஹம்மட்   நஜீம் , நிந்தவூர்  பிரதேச  பொலிஸ் அதிகாரி  ஏ. எல். எம் றஊப்  ,  சாய்ந்தமருது பிரதேச செயலக   உளவளத்துணை  உத்தியோகத்தர்  எம். டி பௌமிலா , கல்முனை மேல் நீதிமன்ற உத்தியோகத்தர்   எம்.எப்f. எம் சமீம்   மற்றும் சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற நியாய சகாயர்களான  எம்.ஐ உதுமாலெவ்வை  ,  எம் எஸ் றவ்சூக் ,  ஏ. எம் றஸ்ஸீட்,    மெளலவி ஏ. எம் நவாஸ்,  எஸ். எல் றஸீட்   மற்றும்  சாய்ந்தமருது குவாஷி நீதிமன்றத்தின் பெண் நியாய சகாயர்களான   ஏ. டபிள்யூ பாத்திமா ஷரோபா,   ஏ. எம். பாத்திமா சஸ்ரின்,  எப். பாத்திமா அஹானி  ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் சாய்ந்தமருது குவாஷி நீதிபதி  ஏ. எல். ஆதம்பாவாவினால்  வரவேற்புரை நிகழ்த்தப்பட்டு  அதனைத் தொடர்ந்து   அல்ஹாஜ்  எம். ஐ. உதுமாலெவ்வை   கல்முனை மேல் நீதிமன்றப் பதிவாளர்   ஏ. எல் அதிமுள்ளா சாய்ந்தமருது பிரதேச செயலக  உளவளத்துணை உத்தியோத்தர்   எம். டி. பௌமிலா    சிறு உரை மேற்கொண்டனர்.

 பின்னர் இன்றைய நிகழ்வின் பிரதம அதிதியான கல்முனை பிராந்திய மேல் நீதிமன்ற நீதிபதி  ஜெயராமன் றொக்சியினால்  தெளிவானதும்  விரிவானதுமான சிறப்புரை மேற்கொள்ளப்பட்டு  பின்னர் சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற நிர்வாகச் செயலாளர்   எஸ் ஜமால்தீனின்    நன்றியுரையுடன்   நிகழ்வானது சிறு துஆவுடன் இனிதே நிறைவு பெற்றது.