சீரடி சாய்பாபாவின் 106 வது மகா சமாதி தினம்





 

(வி.ரி. சகாதேவராஜா)


சீரடி சாயிபாபாவின் 106 வது  மகா சமாதி தின அபிஷேக பெரும் நிகழ்வு நேற்று  (12) சனிக்கிழமை திருக்கோவிலில் நடைபெற்றது.

 திருக்கோவில் தாமரைக்குளத்தில் அமைந்துள்ள சீரடி சாயி கருணாலயத்தில்  காலை முதல் சாயி பஜனை இடம்பெற்றது. 

பஜனை தொடர்ந்து பகல் அன்னதானம் இடம்பெற்றது.

 அதன் பின்பு சாயிபஜனை பாராயணம் மகா சமாதி நேர புராணம் வாசித்தல் என்பவற்றுடன் 2.30 மணி அளவில் அபிஷேகம் இடம்பெற்றது .

சீரடி சாய்பாபாவை திருநீறு கொண்டு அபிஷேகம் செய்து  அலங்கரித்து மங்களஆரத்தி எடுத்தார்கள்.

 அதன் போது பெருந்திருளான சாயி பக்தர்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்றார்கள்.