பாடசாலை உபகரணங்கள் வழங்கல்




 


பாறுக் ஷிஹான்


SADAQA BULLETING WELFARE FOUNDATION" நிறுவனத்தின் அனுசரணையில் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்திய மாணவர்களுக்கு பாதணிகள், அப்பியாசக் கொப்பிகள் மற்றும் புத்தகப்பைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

 பாடசாலை அதிபர் திரு.ஏ.ஜி.எம்.றிசாத்   தலைமையில் செவ்வாய்க்கிழமை(3) இடம்பெற்ற இந் நிகழ்வில் "SADAQA BULLETING WELFARE FOUNDATION" அமைப்பின் பணிப்பாரும் பொறியியலாளருமான திரு. எம்.சீ.கே.நிஸாத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பொதிகளை வழங்கி வைத்த்தார்.

மேலும் இந்நிகழ்வில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர், ஆசிரியர் திரு. ஏ.எம்.எம் சாஹிர் அவர்களும், பாடசாலையின் பிரதி அதிபர் திரு. எம்.ரீ.ஏ.முனாப், மற்றும் பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுச் செயலாளர், உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.