ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து ,கல்முனையில்







 ( வி.ரி.சகாதேவராஜா)


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து கல்முனை மாநகரில் பிரச்சார நடவடிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச இணைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பேராசிரியர் முருகேசு இராஜேஸ்வரன் ஆரம்பித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் முருகேசு ராஜேஸ்வரன்  தலைமையில் இப் பிரசார செயற்பாடு கல்முனை மாநகரில் நேற்று சனிக்கிழமை(7)  நடந்தேறியது.

இதன் போது  நற்பிட்டிமுனை ,பாண்டிருப்பு சந்திகள்,  கல்முனை சந்தை நகர வர்த்தக நிலையங்களுக்கு சென்ற  பேராசிரியர் முருகேசு ராஜேஸ்வரன் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவினை வழங்குமாறு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதன் போது அவரின் ஆதரவாளர்கள் பலரும் பங்கேற்றனர்.