தேசிய மட்டத்தில் பைத் போட்டியில் சம்மாந்துறை வலயம் முதலாமிடம்




 


( வி.ரி. சகாதேவராஜா)

தேசிய மட்ட முஸ்லிம் கலாசார போட்டியில் மர்ஹபா பைத் நிகழ்ச்சியில்  சம்மாந்துறை வலய இறக்காமம் அல் அஷ்ரப் மத்திய கல்லூரி தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது .

இச் சாதனையை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் பாராட்டியுள்ளார்.

இப்பாரிய வெற்றியை பெற்ற மாணவர்களை வாழ்த்துவதுடன் இப்போட்டியை இறுதிவரை வழிநடாத்திய உதவி அதிபர் ஏஎம்எஸ்..இர்பானா  க்கும் பாடசாலையின் அதிபருக்கும் ஏனைய வழிப்படுத்திய ஆசிரியருக்கும் வலயம் சார்பாக இஸ்லாம் பாட வளவாளர் மௌலவி ஏஜேஎம்.அஷ்ரப்( பலாஹி) நன்றிகள் தெரிவித்தார்.