இலங்கையின் ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க மக்களால்,தெரிவு





இலங்கை  சனநாயக சோசலிசக் குடியரசின் 9 வது நிறைவேற்று அதிகாரம்  கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் 9ஆவது ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


புதிய ஜனாதிபதியாக அநுர நாளை காலை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.


இரண்டாவது விருப்பு வாக்குகள் கணக்கெடுக்கப்பட்ட போதும் அநுர அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.