முதியோர் சங்கம் புனரமைப்பு





 (வி.ரி. சகாதேவராஜா)


காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட கண்ணகி முதியோர் சங்கத்தின்  பொதுக்கூட்டம்  நேற்று முன்தினம் காரைதீவில் நடைபெற்றது. 

 இக்கூட்டத்திற்கு அப்பிரிவின் கிராம உத்தியோகத்தர் எஸ்.கஜேந்திரன்   முதியோர்களுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ் .மதிசுதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 
இதன்போது 
புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டதோடு, சங்கத்தினர் சங்க உறுப்பின ஒருவருக்கு வைத்திய தேவைக்கான ஒரு தொகை பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

தலைவராக த.சிவானந்தராஜா( முன்னாள் இபோச உத்தியோகத்தர் ஊடகவியலாளர்)
,செயலாளராக இ.நடேசபிள்ளை(  ஆடை வடிவமைப்பாளர்), பொருளாளராக த. வசந்தாதேவி மற்றும் ஆறு பேர் கொண்ட நிர்வாக சபையினரும் தெரிவுசெய்யப்பட்டனர்.