பிள்ளையான் போன்ற ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் - சஜித்




 



பாறுக் ஷிஹான்


மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தலைமையில் களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில்  ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட  , தொகுதி, பிரதேச , கிராமிய குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மத்திய குழு  உறுப்பினர்கள் ,மாவட்ட இளைஞர் அணி , மகளின் அணியுடனான விசேட கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை ( 15 )  இடம்பெற்றது.


களுதாவளை விளையாட்டு மைதானத்திற்கு  ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவ ர்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அவர்கள் மற்றும் களுதாவளை கிராமிய குழு தலைவர் பார்த்தீபன் வரவேற்று , பின்னர் களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்திலும் வழிபாட்டில் ஈடுபட்டனர் , பின் களுவாஞ்சிகுடியில் இந்த விசேட சந்திப்பு இடம்பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது .

🥳😃😗

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்ததாகவும்  பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கருத்து தெரிவித்தார்.



இவ்வாறான மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உட்பட அனைத்து பிரதேசங்களிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் காணப்படும் தமிழர்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வையும்  இவ்வாறான கொலையாளிகள் கள்வர்கள் மற்றும் சாணக்கியன் அவர்கள் தெரிவித்த முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் தமது அரசாட்சியில்   இதற்கான நீதி நிலைநாட்டப்படும் என்பதனையும் ஐக்கிய மக்கள் கட்சியினுடைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச  உறுதியளித்தார்.
அதனையும் தாண்டி குறிப்பாக  நல்லாட்சிய அரசாங்க காலப்பகுதியில் தான் அமைச்சராக கடமையை ஏற்று இருந்த காலப்பகுதியில் முடிக்கப்படாமல் இருக்கின்ற அனைத்து  வீட்டுதிட்ட வேலைகள் அனைத்தும் ஒரு மாத கால பகுதிக்குள் நிறைவுறுத்தப்படுவதாகவும் கருத்து தெரிவித்தார்.


இந்நிகழ்வில் அம்பாறையில் மாவட்ட இலங்கை தமிழரசு  கட்சியின் உடைய பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபை முதல்வர் சரவணபவன், இலங்கையில் தமிழரசு கட்சியினுடைய மாவட்ட ,  தொகுதி,  மத்திய  , பிரதேச ,  கிராமிய குழு உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுஜகட்சியின் உடைய மட்டக்களப்பு மாவட்ட இளைஞரணி மகளிர் அணி பிரதிநிதிகள் இலங்கை தமிழர் கட்சியினுடைய ஆதரவாளர்கள் என பலர் பலர் கலந்து கொண்டனர் .

இதன் போது கருத்து தெரிவித்த இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்கள்  , கட்சியின் தீர்மானித்திற்கு அமைய  ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைப்பாதாகவும் கருத்து தெரிவித்தனர்.


--

Thanks & Best Regards,

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)