மீலாதுன் நபி நிகழ்வும் தலைவர் அஷ்ரபின் நினைவாக "தலைவர் தினமும் "





 நூருல் ஹுதா உமர்


அகிலத்திற்கோர் அருட்கொடை யாம் உத்தம நபியின் மீலாதுன் நபி நிகழ்வை முன்னிட்டும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃபின் 24 வது நினைவு தினத்தை முன்னிட்டும் நினைவுப் பேருரையும் கத்தமுல் குர்ஆனும், துஆ பிரார்த்தனையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில்.  கல்முனைக் காரியாலயத்தில் இன்று (16) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ. வஸீர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான எம்.ஏ  கலீலுர் ரஹ்மான், ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் ஆகியோருடன் மௌலவி எம்.ஏ.எல் நாஸர் (மன்பஈ), எம் ஜமாலுதீன் (ஹாஸிமி), கட்சியின் முக்கியஸ்தர்களான ஏ.ஜெ.அன்வர் நெளசாத், தேசமானிய ஏ.பி ஜௌபர் ஹாஜி, எம் ரியாஸ், ரைஸுல் ஹக்கீம், எம்.இன்சாட், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ பாவா உட்பட   முக்கியஸ்தர்கள், உலமாக்கள், ஹாபிழ்கள், கட்சியின் போராளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மறைந்த தலைவரின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக விசேட துஆப் பிரார்த்தனை செய்ததோடு உத்தம நபி (ஸல்)அவர்கள் நினைவு சொற்பொழிவு மெளலீது நிகழ்வும் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் காரியாலயமானது கடந்த 35 வருடங்களாக மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் காலத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை பிராந்திய காரியாலயமாக இயங்கிவருகின்றது குறிப்பிடத்தக்கதாகும்.