இளைஞன் மீதுதாக்குதல் இளைஞன் உயிரிழப்பு




 


Rep/SPN

மட்டக்களப்பு சுவிஸ்கிராமத்தில் கூரிய ஆயுத்தால் இளைஞன் மீதுதாக்குதல் இளைஞன் உயிரிழப்பு ஒருவர் கைது 


மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள  சுவிஸ் கிராமத்தில் வீடு ஒன்றில் நண்பர்கள் சுர்ந்து மதுபானம் அருந்திய நிலையில் ஏற்பட்ட வாய்தக்கம் சண்டையாக மாறியதையடுத்து இளைஞன் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதையடுத்து இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்ட 30 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (27) இரவு இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.


சுவிஸ்கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய தங்கேஸ்வரன் அபிலாஸ் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குறித்த கிராமத்திலுள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் 5 பேர் கொண்ட நண்பர்கள் ஒன்று கூடி மதுபானம் அருந்திய நிலையில் அங்கு ஏற்பட்ட வாய்தர்கம்  சண்டையாக மாறிய நிலையில் குறித்த இளைஞன் மீது கூரிய ஆயத்தால் கழுத்து பகுதியில் தாக்கப்பட்டதையடுத்து அவன் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் கொண்டு சென்ற போது  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 


இதனையடுத்து இளைஞன் மீது தாக்குதலை மேற்கொண்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்துள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற அனுமதியை பெற நடவடிக்கை முன்னெடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.