அரியநேத்திரனின் பிரச்சார நடவடிக்கையில் அடிக்கடி இடையூறு




 


பாறுக் ஷிஹான்


ஜனாதிபதி தேர்தலில் இம்முறை போட்டியிடும்  தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு நமக்காக நாம் எனும் தொனிப்பொருளில் இன்று  தேர்தல் பிரசாரத்தை   அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்திருந்தார்.

தனது பிரச்சாரத்தை முன்னெடுத்த சந்தரப்பத்தில் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் அவருடன் முரண்பட்டதனை அவதானிக்க முடிந்தது.

தனது பிரச்சாரத்தை  பெரியநீலாவனை முருகன் கோயில் முன்றலில் இருந்து  ஆரம்பித்த வேளை பூஜையில் ஈடுபட்டார்.

பின்னர் மற்றுமொரு பிரச்சார நடவடிக்கைக்காக செல்வதற்கு தயாராகி கொண்டிருக்கும் போது அங்கு வந்த  பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் விசேட அதிரடிப்படையினரின்  இடையூறினால் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

பின்னர் கல்முனை ஆர்.கே.எம்   சந்தி  கல்முனை தரவை பிள்ளையார் முன்றல் உள்ளிட்ட  காரைதீவு கண்ணகி அம்மன் கோயில் பகுதியிலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது இவ்வாறு அழுத்தங்கள் தொடர்ந்ததுடன் பாதுகாப்பு தரப்பினரால் தீவிரமாக கண்காணிப்பிற்கு உள்ளானார்.
--