நூற்றாண்டு விழா





 ( வி.ரி. சகாதேவராஜா)


பெரிய நீலாவணையில் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்  ய. அநிருத்தனின் வழிகாட்டலின் கீழ் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைகளமும், சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து  பெரிய நீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில்
இவ் விழாவை நடாத்தியது.

 முத்தமிழ் வித்தகர்  சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா பாடசாலையின் அதிபர் திருமதி வை.இராமநாதன் தலைமையில் இடம் பெற்றது.

 இந்நிகழ்வில் கல்முனை வலையக்கல்வி பணிமனையின் இந்துசமய பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர்  ம.லக்குணம், சைவப் புலவர் வளவாளர்  ஜோ.கஜேந்திரா, வளவாளர்  நா.சனாதனன், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் .

பாடசாலைகளுக்கான  சுவாமியின்  திருவுருவப்படங்களை  சமயப்பற்றாளர் திரு மகேந்திரன் சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றத்திற்கு  வழங்கி  வைத்தார் . இதனை பாடசாலைகளுக்கு   மன்ற உறுப்பினர்கள் திணைக்களத்துடன் இணைந்து  வழங்கி வருகின்றனர்.   ஏற்பாடுகளை இந்து சமய கலாசார 
அலுவல்கள் திணைக்களத்தின் சார்பில் மாவட்ட செயலக இந்து கலாசார உத்தியோகத்தர்  கு. ஜெயராஜி மேற்கொண்டார்.

இது பன்னிரண்டாவது பாடசாலை நிகழ்ச்சி திட்டமாகும்.