துவிச்சக்கரவண்டிகள்,வழங்கி வைப்பு




 


( வி.ரி. சகாதேவராஜா)


காரைதீவு பிரதேசத்தில் பொருளாதார ரீதியாக இடர்படும் 10 குடும்பங்களின் பிள்ளைகளுக்கு 
உலர் உணவு  பொருட்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் துவிச்சக்கர வண்டிகள் போன்றவற்றை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம வழங்கி வைத்தார்.
 
சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஒழுங்கமைப்பில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன்  தலைமையில்  
 UNICEF & PPCC நிறுவனத்தின் உளநல உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  இவ் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

 சிறுவர் கழகங்ளை வலுப்படுத்தும்  நோக்குடன் சிறுவர் நூலகங்களுக்குத் தேவையான பொருட்கள் புத்தகங்கள் கதிரைகள் மேசைகள் மற்றும் விளையாட்டு  உபகரணங்களும்  வழங்கி வைக்கப்பட்டன.