அல்-அஷ்ரக் வித்தியாலய வரலாற்றில் இன்னொரு மைல்கல் !




 



நூருல் ஹுதா உமர்


கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் முதன் முதலாக நடைபெற்ற அகில இலங்கை தேசிய மட்ட முஸ்லிம் சமய கலாசார போட்டியில் கல்முனை கல்வி வலய, நிந்தவூர் கல்வி கோட்டத்தின் கமு/கமு/ அல்-அஷ்ரக் மத்திய மஹா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) மாணவர் உமர் அலி அப்துல் நாபி அலி முஸ்லிம் கலாசார நிகழ்ச்சி அதான் ஒலித்தல் போட்டியில் முதலிடம் பெற்று சாதித்துள்ளார்.  

கொழும்பு சாஹிரா கல்லூரியில் நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் வெற்றி வாகை சூடிய இம்மாணவனுக்கும், பொறுப்பாசிரியர்களுக்கும் மற்றும் அழைத்துச் சென்று வழிநடாத்திய தாய் தந்தையருக்கும் அல்-அஷ்ரக் சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பாடசாலை அதிபர் ஏ. அப்துல் கபூர் தெரிவித்துள்ளார்.