டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்




 





திருக்கோவில் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு....


திருக்கோவில் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி MOH.Dr.P.மோனகாந்தன் அவர்களின் தலைமையில்.....


 கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய பணிபனையின் நுளம்பியல் ஆய்வு குழுவின் ஆய்வின் படி   டெங்கு நுளம்பு அதிகம் பரவும் அபாயம் காணப்பட்டுகிறதாக கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைவாக தம்பிலுவில் பகுதியில் இன்றைய தினம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது....


இவ் நடவடிக்கையில் டெங்கு நுளப்புகள் காணப்படக்கூடிய இடங்கள் பொருட்கள் என்பவன அடையாளம் காணப்பட்டு அவ்வீட்டு மற்றும் வளவு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை கடிதங்களும் வழங்கப்பட்டதுடன்....


அவ் கழிவுப்பொருட்களை அகற்றும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டது....


இவ் நடவடிக்கையில் திருக்கோவில் பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோத்தர்கள்  திருக்கோவில் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோத்தர்கள் ,கிராம சேவகர்கள்,கிராமசேவையாளர்களுக்கான நிறுவாக உத்தியோத்தர், முப்படையினர்  மற்றும் பொதுமக்கள் சமுகசெயற்பாட்டாளர்கள் திருக்கோவில் பிரதேச சபையின் ஊழியர்கள்  என பலரும் இவ் நடவடிகையில் கலந்து கொண்டனர்....


ஜே.கே.யதுர்ஷன்

பிராந்திய செய்தியாளர்...