சத்தியப்பிரமாண மொழிபெயர்ப்பாளர்




 


வி.சுகிர்தகுமார்  

 சத்தியப்பிரமாண மொழிபெயர்ப்பாளர்.

 அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு நகரை வதிவிடம் ஆகவும் கொண்ட ஓய்வு நிலை ஆசிரியரான சாமித்தம்பி புண்ணியமூர்த்தி  சத்தியப் பிரமாண மொழிபெயர்ப்பாளராக ( ஆங்கிலம் - தமிழ் )  சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

   2023 ஆம் வருடம் டிசம்பர் மாதம் நீதி அமைச்சினால் நடாத்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த இவர் சத்தியப் பிரமாண மொழிபெயர்ப்பாளராக ( ஆங்கிலம் - தமிழ் ) மட்டக்களப்பு மாவட்ட நீதவான்  ஜனாப்.எச்.எம். முகம்மட் பஷீல்  அவர்கள் முன்னிலையில் 2024.07.30  அன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

 அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின்  கலைமாணிப்  பட்டதாரியான இவர் இதே பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மொழிபெயர்ப்பு கற்கையின் பட்டப்பின் டிப்ளோமா (Post Graduate Diploma in Translation Studies )பாடநெறியில்  சித்தியடைந்துள்ளார். 
அத்தோடு கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த தொலைக்கல்வி நிலையத்தின் ஆங்கில டிப்ளோமா பாடநெறியிலும் இவர் இரண்டாம் பிரிவுச் சித்தியைப் பெற்றுள்ளார்.

 இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்கல்வி டிப்ளோமா சான்றிதழையும்  கிழக்குப் பல்கலைக்கழகத்தில்  கல்வி முதுமாணிப் பட்டத்தையும்  பெற்ற இவர்  அக்கரைப்பற்றைச் சேர்ந்த சாமித்தம்பி பூரணம்மா தம்பதிகளின் புதல்வர்.  என்பதுடன்  அகில இலங்கை சமாதான நீதவான் ஆக சமூகப் பணிகளில் ஈடுபாடு காட்டி வருகின்றார்.