விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா




 


( வி.ரி.சகாதேவராஜா)


கல்முனை இ.கி.மிஷன் மகா வித்தியாலயத்தில்  சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழாத் தொடர் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்  ய. அநிருத்தனின் வழிகாட்டலின் கீழ் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும், காரைதீவு சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து  நடாத்திய  அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா பாடசாலையின் அதிபர் திருமதி விஜயசாந்தி நந்தபாலா 
தலைமையில் இடம் பெற்றது.

 இந்நிகழ்வில் கல்முனை வலையக்கல்வி பணிமனையின் இந்துசமய பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர்  ம.லக்குணம், 
தொழில் வழிகாட்டல் ஆசிரிய ஆலோசகர் எஸ். சிவசுந்தமூர்த்தி மற்றும்  கல்முனை வடக்கு பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி நா. ஸ்ரீபிரியா, சைவப் புலவர், வளவாளர்  ஜோ.கஜேந்திரா, வளவாளர்  நா.சனாதனன், 
சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் நிருவாக உறுப்பினர்களான   கு.கிலஷன்,.கோ திருநாகரன், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 பாடசாலைகளுக்கான  சுவாமியின்  திருவுருவப்படங்களை  சமயப்பற்றாளர் எஸ். மகேந்திரன்  சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றத்திற்கு  வழங்கி  வைத்தார் . இதனை பாடசாலைகளுக்கு   மன்ற உறுப்பினர்கள் திணைக்களத்துடன் இணைந்து  வழங்கினர்.   

ஏற்பாடுகளை இந்து சமய கலாசார 
அலுவல்கள் திணைக்களத்தின் சார்பில் மாவட்ட செயலக இந்து கலாசார உத்தியோகத்தர்  கு. ஜெயராஜி மேற்கொண்டார்.

விழாத் தொடரின் நான்காவது பாடசாலை நிகழ்வு இதுவாகும்.