காட்டு யானையை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் கைது




 




தம்புள்ளை – பக்கமூன பகுதியில் காட்டு யானையை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.    


பக்கமூன பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.     


பக்கமூன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் முச்சக்கரவண்டியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோது அவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காட்டு யானை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.