நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு





 (எம்.என்.எம்.அப்ராஸ்) 


அம்பாறை மாவட்ட செயலகத்தின் நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை உயர்தர பிரிவு மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பாடசாலையின் அதிபர் அருட் சகோ.எஸ்.இ.றெஜினோல்ட் தலைமையில் இன்று (31)இடம்பெற்றது. 

 இதன் போது பாவனையாளர் உரிமைகள், பொறுப்புகள்,சட்டங்கள்,பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்மந்தமாக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

இவ் விழிப்புணர்வு நிகழ்சிக்கு பிரதான வளவாளராக அம்பாறை மாவட்ட நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரி இஷட்.எம்.ஸாஜீத் மற்றும் புலன் விசாரணை அதிகாரி ஐ.எல்.மர்ஜூன்,
எம்.எச்.எம்.றிபாஜ் ஆகியோருடன் பாடசாலையின் உயர்தர பிரிவு பகுதித் தலைவர்கள் ஆசிரியார்களும் கலந்து கொண்டனர்.