அம்பாரை மாவட்டத்தில் உள்ள 442 பாடசாலைகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வசதியினை ஏற்படுத்துவேன்




 



ஆலையடிவேம்பு நிருபர் வி.சுகிர்தகுமார் 


 அம்பாரை மாவட்டத்தில் உள்ள 442 பாடசாலைகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வசதியினை ஏற்படுத்துவதோடு ஏஜ தொழிநுட்பம் உள்ளிட்ட அனைத்து தொழிநுட்ப கற்கை நெறிகளையும் ஆரம்பித்து அம்பாரை மாவட்டத்தை தொழிநுட்ப கல்வியல் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாகவும் மாற்றுவேன் என எதிர்கட்சி தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரோதாசா தெரிவித்தார்.
அத்தோடு அம்பாரை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு குளம் உள்ளிட்ட அனைத்து விவசாய குளங்களையும் புனரமைப்பதோடு விவசாயிகளுக்கு சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்கி கொடுப்பேன் எனவும் குறிப்பிட்டார்.
அக்கரைப்பற்று மண்ணிற்கு வருகை தந்த அவர் ஜக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரான வெ.வினோகாந்தின் அழைப்பின் பெயிரில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில்  (27) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட அவருக்கு மக்கள் மகத்தான வரவேற்பளித்தனர்.
இதன் பின்னர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் உள்ளிட்ட அரச தலைவர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில் அம்பாரை மாவட்டத்தில் விவசாய செய்கையில் ஈடுபடுத்தப்படாமல் இருக்கும் அனைத்து விவசாய நிலங்களிலும் விவசாய செய்கையினை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுப்பபேன். இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களையும் புனரமைத்து அனைத்து விவசாய போகங்களிலும் விவசாயிகள் தேவையான நீரைப்பெற்று நலன் பெற கையளிப்பேன் எனவும் கூறினார்.
இக்கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.