பிரதிக் கல்விப் பணிப்பாளர் சகோதரி J.தாஜுன்னிஷா, மறைவு







 #ஜனாஸா_அறிவித்தல்! 

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் (Planning) பிரதிக் கல்விப் பணிப்பாளர் சகோதரி J.தாஜுன்னிஷா அவர்கள் இன்று மாலை இறையழைப்பை ஏற்றுக் கொண்டார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...


தனது வறுமையிலும் கல்வியால் உயர்ந்து SLEAS அதிகாரியாக தனது பயணத்தை ஆரம்பித்த சில வருடங்களிலேயே இந்த இளம் வயதில் இவ்வுலகை விட்டும் பிரிந்து விட்டார் என்கின்ற செய்தியை மனம் ஏற்க மறுக்கின்றது. 

ஓட்டமாவடி - மாஞ்சோலை பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜே.தாஜுன் நிஷாவின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (20) சனிக்கிழமை காலை 8 மணியளவில் ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெற்றது.
ஒரு ஆண் குழந்தையின் தாயான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜே.தாஜுன் நிஷா மரணிக்கும் போது அவருக்கு வயது 35 ஆகும்.
இருத நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த போதும் தனது கடமையினை திறன்பட மேற்கொண்ட ஒரு சிறந்த அதிகாரியாக அவர் காணப்பட்டார்.

எமது சமூகப் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஒரு பெண்மணி.இன்றைய அவரது இழப்பு எமது சமூகத்திற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகவே பார்க்கிறோம்.


அன்னாரது கணவர் சகோதரர் மைசான் மற்றும் அவரது குழந்தை ஆகியோருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும் எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது மறுமை வாழ்வு ஈடேற்றம் உள்ளாதாக அமைய வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.