அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக விபத்து











அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் பயணித்த,இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காலி- பாசிகுடா .பஸ் வண்டி அக்கரைப்பற்று,நீதிமன்ற வளாகத்தின் முன்பாக பயணித்துக் கொண்டு இருந்தது. அக்கரைப்பற்று கிழக்கு வீதியில் இருந்து பொத்துவில் வீதிக்கு மிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சாரதி கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் மோதுண்டார் . அரசு பேருந்துக்கு முன் பக்கத்தில் சிறிது சேதம் ஏற்பட்டு இருக்கின்றது.

மோட்டார் வண்டியினைச் செலுத்தியவர், தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.