சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு காரைதீவில் நிதியுதவி




 


மாளிகைக்காடு செய்தியாளர்


சீரற்ற காலநிலையினால் இவ்வருட ஆரம்பப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அம்பாறை மாவட்ட காரைதீவு-01,06,07 மற்றும் 11 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் பத்தொன்பது வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கான முற்பண தொகை 10,000/- வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி.ராகுலநாயகி சசிந்திரன் தலைமையில் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தரின் ஒருங்கிணைப்பில் காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்திபன், நிர்வாக கிராம உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.