நியமனம்




 


பாறுக் ஷிஹான்

 
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தின்  கரைவாகுப்பற்று மருதமுனை -01 க்கான முஸ்லிம்  விவாகப்பதிவாளராக 2022.05.24 ஆம் திகதி முதல்  கடமையாற்றி வந்த சமாதான நீதவான் முகம்மது யூசுப் முகம்மது அக்றம்  தனது பதவிக்கு மேலதிகமாக புதன்கிழமை (17)முதல் செயற்படும் வண்ணம் அதேபிரிவிற்கான பிறப்பு -இறப்பு பதிவாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக்கடிதத்தை  அம்பாரை கச்சேரியில் வைத்து  மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவரும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தருமான   எம்.ஐ.எம். முகர்றப்   முன்னிலையில் பெற்றுக்கொண்டார்.