சுசந்திகா ஜயசிங்கவின் தாயார் காலமானார்




 


ஒலிம்பிக் பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்கவின் தாயார் இன்று (11) காலமானார்.

இலங்கை தடகள வரலாற்றில் ஒலிம்பிக் பதக்கத்தையும் உலக தடகள சம்பியன்ஷிப் பதக்கத்தையும் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மகளின் தாயாரான, மெனிக்புரகே பேபி நோனா என அழைக்கப்படும் சுசந்திகாவின் தாயார் மரணிக்கும்போது 81ஆவது வயதாகும்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுந்திகாவின் தாயாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மாகொல வடக்கு பிரதேசத்தில் வைக்கப்பட்டுள்ளது