காணிப் பயன்பாடு தொடர்பான விளக்கமளித்தலும் வலுவூட்டலும்!!





 நூருல் ஹுதா உமர்


கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் காணிப் பயன்பாடு தொடர்பான விளக்கமளித்தலும் வலுவூட்டலும் இன்று பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அதிபர் திரு.ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கல்முனை பிரதேச செயலகத்தின் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர் திரு.ஐ.எம் ஜௌபர் அவர்களும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர் திரு. ஏ.எச். எம்.சஞ்சீர் அவர்களும் மாணவர்களுக்கு காணிப் பயன்பாடுகள் தொடர்பான விளக்கங்களை அளித்தனர்.

மேலும், காணிப் பயன்பாடுகளை நாம் எவ்வாறு  கையாளவேண்டும், அதன் தன்மைகள், அமைப்புக்கள் பற்றி அறிந்து  எவ்வாறான வேலைத் திட்டங்களை இலகுவாக மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான விளக்கங்களையும் காணொளி மூலம் மாணவர்களுக்கு முன்வைத்தனர்.

இந்நிகழ்வில் ஆலோசனை வழிகாட்டல் பிரிவுக்குப் பொறுப்பான ஆசிரியரும், மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.