பாடசாலை முன்பாக,போராட்டத்தில்





 (எஸ்.அஷ்ரப்கான்)


அரசு, ஜூன் 26 தொடுத்த மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து நாடு தழுவிய ரீதியில் பாடசாலை முன்பாக அதிபர் ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டம் இன்று (02) பாடசாலை நிறைவடைந்த வேளையில் 2 மணிக்கு பின்னர் இடம்பெற்ற இப்போராட்டம் இலங்கையில் உள்ள சகல பாடசாலைகள் முன்பாகவும் இடம்பெற்றது.

இந்த போராட்டத்தை இணைந்த அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயம்  முன்பாக ஆசிரியர்களின் போராட்டம் இடம்பெற்றது. இதில், சாதாரண வேண்டுதலுக்கு தீர்வு கொடு ! , ரணில் விக்கிரமசிங்கவின் ஒடுக்குமுறை அறிக்கைக்கு எதிராக போராடுவோம் !  என பல்வேறு சுலோகங்களை ஏந்தி அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இப்போ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் கருத்து வெளியிடும்போது, போராட்டத்திற்கான தீர்வு கிடைக்காத விடத்து தொடர்ந்தும் போராட்டத்தை முன் கொண்டு  செல்லப் போவதாக கருத்து வெளியிட்டனர்.